அதிரை 10வது வார்டு ஹாஜா நகரில் இருந்து தரகர் தெரு மைதானத்திற்கு வரும் பாதையில் கடந்த 1 மாதமாக குடி தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக சென்று வருகிறது .அந்த தண்ணீர் சாலையில் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து தரகர் தெரு இளைஞர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்:
அதிரை ஹாஜா நகரில் இருந்து தரகர் தெரு மைதானத்திற்கு வரும் பாதையில் கடந்த 1 மாதமாக குடி தண்ணீர் குழாய் உடைந்து ஓடுகிறது இதை பற்றி 10வது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.எங்கள் கோரிக்கையை தட்டி கழித்து தான் வருகிறார்கள்.இன்று காலை மீண்டும் பேரூராட்சி அலுவலகம் சென்று கூறி உள்ளோம் நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம் என்றார்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது