அதிரை-தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்து விபத்து!

Unknown
0
அதிரை- தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்து இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டது .இந்த பேருந்தில் திருச்சி,தஞ்சாவூரில் படிக்கும் அதிரை மாணவர்கள் ஏராளமானோர் செல்வது வழக்கம் .இன்று காலை அந்த பேருந்து பட்டுக்கோட்டை பைபாசில் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் மீது மோதியது.இதில் அந்த வேன் நிலைதடுமாறி பைபாஸ் ரோட்டிற்கு அருகே இருந்த பாலம் மீது மோதியது.இதில் அந்த வேனில் சென்ற குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்ப்பட்டது.உடனே அருகில் இருந்தவர்கள் அந்த குழந்தைகளை மீட்டனர்.மேலும் அந்த சாலை அருகில் அந்த பாலம் இல்லாவிட்டால் மிக பெரிய விபத்து ஆகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள்.இந்த விபத்துக்கு முக்கிய காரணம் வேகம் தான் என்று கூறப்படுகிறது.  



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)