அதிரையில் அனைத்து கடைகளும் பேருந்துகளும் வழக்கம் போல இயக்கம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0

தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில அணை கட்டுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளனர். 

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொமுச போன்ற எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காததால் குறைவான பேருந்துகளே ஓடுகின்றன. போராட்டத்தை ஒட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் அதிரையை பொருத்தமட்டில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைப்பெற்று வருகிறது. அதிரை மெயின் ரோடு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கான தடங்களே இல்லை. அது போல் பெருந்துகளும் வழக்கம் போல ஓடுகின்றன.




படங்கள்:பிலால் (அதிரை பிறை)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)