அதிரையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பேட்டை வரை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க அதிரை நகர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளி அருகிலும் சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகிலும் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேகதடைப் பணிகளை அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், அதிமுக உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Advertisement









பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபூப் போல வேகத்தடை, அழகான வேகத்தடை, தாலாட்டும் வேகத்தடை, தந்தி அடிக்காத வேகத்தடை, இருமல் வராத வேகத்தடை, புளிச்ச ஏப்பம் வராத வேகத்தடை.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.