பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு நேற்று இரவு 11.00 மணியளவில் சென்று கொண்டிருந்த மாவட்ட பொருளாளர் அதிரை ஹாஜா,அதிரை நகர நிர்வாகி தமீம் அன்சாரி,செய்யது,மற்றும் ராஜிக் ஆகியோரை 15 ம் மேற்ப்பட்டோர் வழிமறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் இதில் ராஜிக் என்பவரை அவர்கள் கடத்தி சென்று விட்டனர். அஹ்மத் ஹாஜா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இன்று மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கடத்தி செல்லப்பட்ட அதிரை இளைஞரை ஒரத்தநாடு தாலுகா டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
தகவல்:மதுக்கூர் ஃபவாஸ்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது