அலட்சியம் காட்டும் அதிரை மின்சார வாரியம்!

Unknown
1


அதிரை வாய்க்கால் தெரு அருகே இன்று காலை மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இந்த மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்த சமூக ஆர்வலர் ஷாகுல் ஹமீது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.உடனே மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்.மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது.இதனால் ஷாகுல் ஹமீது மற்றும் அந்த பகுதி மக்கள் யாரையும் அந்த பகுதிக்குள் வராமல் பாதுகாத்தனர்.இறுதியாக மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து அறுந்து தொங்கி கொண்டு இருந்த மின்கம்பியை சரி செய்தனர்.






Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.

    என்னுடைய தம்பி கிஜார் முஹம்மது வீடு இந்த மின் கம்பத்திற்கு அருகில் தான் இருக்குது, தற்போது தம்பி கிஜார் முஹம்மது அமெரிக்காவில் இருக்கின்றார்.

    மின்வாரிய ஊழியர்கள் வர தாமதம் ஆகவே, வீட்டிலிருந்து தம்பிக்கு தகவல் போக, உடனே தம்பி இன்று காலை 9.30மணிக்கு தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ள, உடனே நான் மின்வாரிய அலுவலராகிய போர்மேன் திரு முருகேஷ் அவர்களுக்கு தகவல் கொடுக்க. மற்ற வேலைகள் சிறப்பாக முடிந்தது.

    குறிப்பு:- அதிரையில் தற்போது மின்கம்பிகள் அதிகமான இடங்களில் அறுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.

    ReplyDelete
Post a Comment