பட்டாம்பூச்சியை ரசிக்காதவர்கள் மிக குறைவே அதிலும்ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளை ஒரே இடத்தில் காண்போமானால் உள்ளம் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் எனபதில் சந்தேகமில்லை.பார்வையாளர்களின் மனம் கவரும் வகையில் துபாயில் லட்சக்கணக்கணக்கான மலர்களோடு அமைந்துள்ள மிராக்கிள் கார்டன் எனும் மலர் பூங்கா இதன் அருகிலலேயே ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளுடன் பட்டர் பிளை கார்டன் என அழைக்கப்படும் பட்டாம் பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கு சமீபத்தில் திறக்கப்பட்டது.
இப்பூங்காவில் 9 மண்டபங்கள் அமைக்கப்பட்டு அதன் உள் அரங்கத்தில் பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷன நிலை உருவாக்கப்பட்டு அங்கு பல்வேறு வகையான மலர்களுடன் கூடிய செடி,கொடிகளோடு ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் பறக்கவிடப்ட்டுள்ளது. கலர் கலராக சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய பார்வைளர்களுக்கான பட்டாம் பூச்சி பூங்கா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் இப்பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக 50 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது