
அதிரை கடற்பகுதியில் வெள்ளி
மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. நமதூர் காந்தி துறைமுக பகுதியில் மீனவர்கள் பைபர்
படகில் மீனவர்கள் தேசப்பொடி வலைகளை பயன்படுத்தி தேசப்பொடி(வெள்ளி மீன்கள்) பிடிக்கின்றனர்.
இப்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அதிரை பகுதியில்
பிடிபடும் தேசப்பொடி மீன்கள் கிலோ 250 ரூபாய்க்கு விலைபோகிறது. இந்த மீன்கள் அதிரை
மக்கள் விரும்பி வாங்கி செல்வதால் மார்க்கெட்டில் மீன் சில்லரை வியாபாரிகள் கூறு போட்டு
விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து மீன் வியாபாரி
சாவன்னா கூறுகையில் இந்த தேசப்பொடி மீன்களுக்கு பல பெயர்கள் உள்ளன. வெள்ளி மீன்கள்,
வெள்ளி மீன்கள், வெள்ளைப்பொடி, மட்லீஸ் என பல வகை பெயர்கள் உள்ளன. இப்போது இந்த வகை
மீன்கள் அதிகளவில் பிடிபடுகிறது. இம்மீன்களை எங்களிடம் கிலோ 250 ரூபாய்க்கு வாங்கி
350 ரூபாய்க்கு வெளியிடங்களில் விற்பனை செய்கின்றனர்.
இப்போது மீன்பிடி தடைக் காலம்
என்பதால் மீன்களின் வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் தேசப்பொடி மீன்களின் வரத்து
படகிற்கு 10 வரை கிடைக்கின்றது என்றார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது