இன்றைய தினம் நடைப்பெற்ற அரை இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை எதிர்த்து நமதூர் AFFA அணி களமிறங்கியது. முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் திருச்சி அணி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் துவக்கத்தில் திருச்சி ஒரு கோல் அடிக்க ஆட்டத்தின் விறுவிறுப்பு கூடியது. இறுதி நேரத்தில் AFFA அணி வீரர் தாரிக் அவர்கள் லாவகமாக ஒரு கோலை அடித்து துவண்டு போயிருந்த அதிரை ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினார்.
மீண்டும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து ஆட்ட முடிவை டைபிரேக்கர் முறையில் தீர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டது. டைபிரேக்கரில் திருச்சி அணி 5-4 என்றா கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. கால்பந்தாட்ட போட்டியை பார்க்க வந்தப் ரசிகர்களுக்கு இரு அணி வீரர்களும் விறுவிறுப்பான ஆட்டத்தை வழங்கினர்.
இறுதி போட்டி நாளை மறுதினம் தென்னரசு மெமோரியல் பள்ளத்தூர் அணியை எதிர்த்து இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணி விளையாட உள்ளது.


Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது