எத்தி வைக்கும் செய்திகளை
எளிதாக்க உதவினாலும்
வத்தி வைக்கும்
வதந்தித் தீயெ அதிகம்!
உண்மைகள் வீட்டிற்கு
உள்ளே வருவதற்குள்
பொய்மைகள் வாட்ஸப்பில்
புறப்பட்டும் பாரெங்கும்!
நிழற்படங்கள் யாவும்
நிச்சயமாய்ப் பிழைகள்
உழலவைக்கும் மனங்களை
உலைவைக்கும் குடும்பங்களை!
நாளும் செய்திகளை
நலமாய்ப் பதிவோம்
ஆளும் அறிவியலின்
ஆற்றலை மதிப்போம்!
“கவியன்பன்” கலாம், அபுதாபி


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது