FLASH NEWS: சென்னையில் நிலநடுக்கம்!

Editorial
0
நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவின் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

நேபாளம், ஆப்கானிஸ்தான்

நேபாளம் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

சீனா


இதேபோல் சீனாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் 4.7 ஆகவும், இந்தோனேஷியாவில் 5.1 ஆகவும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியா


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம்


டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் காலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

நிலநடுக்கத்தால் டெல்லியில் உடனடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

கேரளா


இந்நிலையில் கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை


இதனிடையே சென்னையிலும் பெசன்ட் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விகடன்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)