அதிரையில் தண்ணீர் திருட்டா?

Editorial
1
அதிரை மிலாரிக்காட்டில் இருந்து அதிரை மேலத்தெருவில் உள்ள தண்ணீர் தேக்கத் தொட்டியில் நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீர் தேக்க தொட்டியில் இருந்து அதிரை மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைகாரத்தெரு, காலியார் தெரு, நடுத்தெரு, வாய்க்கால் தெரு, ஆஸ்பத்திரி தெரு, புதுத்தெரு, திலகர் தெரு, கடற்கரைத் தெரு, ஹாஜா நகர், தரகர் தெரு போன்ற தெருக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் அதிரையிம் பெரும்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மிலாரிக்காட்டில் இருந்து மேலத்தெரு தண்ணீர் தேக்க தொட்டிக்கு செல்லும் தண்ணீர் மிகவும் மெதுவாக நிறம்புவதாகவும் இதனால் தூரத்தில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் செல்வது தாமதிப்பதாகவும் புகார் வந்ததை அடுத்து EO தலைமையில் ஒரு குழுவினர் தண்ணீர் டாங்கிக்கு சென்று ஆராய்ந்தனர். இதில் மிலாரிக்காட்டில் இருந்து தண்ணீர் தேக்க தொட்டிக்கு செல்லும் தண்ணீர் பாதையில் சட்டவிரோதமாக தண்ணீர் நேரடியாக அருகில் உள்ள வீடுகளுக்கு செலுத்தப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து EO தண்ணீரை நேரடியாக எடுத்துக்கொள்ளும் வீடுகளுக்கு சென்று இது குறித்து கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் பல வருடங்களாக இவ்வாறு தான் பயன்படுத்தி வருகிறோம் என்றும் இனி தண்ணீர் லைனை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு செல்லும் பாதையிலே தண்ணீரை வீடுகளுக்கு திருப்பி விடுவதால் தண்ணீர் தொட்டி நிறைவது தாமதமாவது மற்றுமின்றி ஏனைய பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வீட்டார்கள் அதிரையில் உள்ள அனைத்து மக்களின் நலன் கருதி நேரடி தண்ணீர் லைனை அடைத்து விட்டு தண்ணீர் தேக்க தொட்டியில் இருந்து பெறும் தண்ணீரை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறொம்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. சென்ற இடமெல்லாம் மகரிப் தொழுகைக்கு இடைவெளி விடாமல் விருதுகள் வழங்கும் விழாவை நடத்திய அதிரை நியூஸின் உண்மை முகம் பற்றி பெரியளவில் விவாதிக்கின்றனர். அல்லாஹு அக்பர்

    ReplyDelete
Post a Comment