அதிரை WFC அணி இன்று கூத்தானல்லூரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட தொடரில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் பொதக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பாக ஆடிய நமதூர் WFC அணி 1-0 என்ற கோல் கணக்கில் பொதக்குடி அணியை வீழ்த்தியது.
இதனை அடுத்து WFC அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்து கோப்பை கைப்பற்ற அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் விருதுகள் வழங்கும் விழாவை நடத்திய அதிரை நியூஸ் நிர்வாகிகளே இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்
ReplyDeleteஇது போல் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பாக இரவு கேளிக்கைகள், இரவு விளையாட்டுகள், தொழுகைக்கு நேரம் ஒதுக்காத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஹதீசுக்கு மாற்றுக் கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சிகள், ஷஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என்று கொள்கையற்றுப் போய் அவைகள் அனைத்திற்கும் இலவசமாக அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?
ReplyDeleteநன்றி - அதிரைநிருபர் பதிப்பகம்.