
கூகுள் நிறுவனம் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது. இதன் மூலம்எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை
பயன்படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் தானியங்கி கார், கூகுள்
கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் பலூன் என பெயரிட்டுள்ளது கூகுள் நிறுவனம். முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி:தமிழ்பேப்பர்.காம்

//3G இண்டெர்னெட் சேவையை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்://
ReplyDeleteதலைப்பு ஒன்றாக இருக்கு கீழே உள்ள செய்தியில் 3G பற்றிய செய்தி இல்லையே
சிரமத்திற்க்கு மன்னிக்கவும் மன்சூர் அவர்களே! அஃதாவது இந்த பதிவில் கூற வந்திருப்பது என்ன என்றால் 3g சேவைக்கான உபகாரங்களை ராட்சத பலூன்களின் மூலம் நகரங்களின் மேல் பறக்கவிட்டு 3G சேவையை தொடர உள்ளது.
Delete