50 வருடங்களுக்கு பிறகு துப்புரவு செய்யப்படும் அதிரை செய்னா குளம் (காணொளி,புகைப்படங்கள்)

0
நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரிக்கு பின்புரம் அமைந்திருக்கும் கீழத்தெரு செய்னா குளம் கடந்த 50 ஆண்டுகளாக மாசுபட்டு அப்பகுதியில் இருக்கும் வீடுகளின் கழிவு நீர் தேங்கும் இடமாக இருந்து வருகிறது.அந்த குளத்தை பற்றி
யாரிடம் கேட்டாலும் அது சாக்கடை குளமாச்சே! என்று கூறும் அளவுக்கு மிகவும் மாசடைந்து காணப்பட்டது.இந்நிலையில் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு பிறகு இந்த குளத்தை கடந்த ஒரு வாரமாக பொக்லைன் எந்திரம் கொண்டு அந்த குளத்தின் மேல் படர்ந்துள்ள சாக்கடை மற்றும் சகதிகளை அகற்றி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் பூங்கா அமைக்க உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.50 வருடங்களுக்கு முன் இக்குளம் மிகவும் தூய்மையான, மக்கள் குளிப்பதற்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


   
     


                                                          






Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)