இலண்டன் வானொலியில் அதிரையர்களின் கவிதையும்; குரலும் ஒலிபரப்பு : க்விதைத் தலைப்பு: “சுழற்சி”

0



சுழற்சி தலைப்பில் 19.12.2013 வெளியிடப்பட்ட கவிதையும்,, வீடியோவும்.



குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம்
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம்
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும்
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம்
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்

காற்றினால் சுழற்சிக் காட்டிடும் காட்சிக்
..............கடும்புயற் கோலமாய்ச் சாட்சி
ஆற்றினில் சுழற்சி நீரினில் வேகம்
......ஆர்த்திடும் பொழுதினில் சோகம்
நேற்றுள நிலைமை இன்றுதான் உண்டா
...............நேரிடும் சுழற்சியைக் கண்டால்
மாற்றிடும் காலச் சுழற்சியால் வாழ்க்கை
................மானிடன் நடந்திடும் போக்கே!

கதிரவன் சுழற்சி மாற்றிடும் நேரம்
.......காலமும் பொழுதெனக் கூறும்
புதியதில் சுழற்சிச் செய்திடும் வேலை
.............புகுத்திடும் புதுமையை நாளை
மதியினிற் சிந்தைச் சுழற்சியால் மாண்பாய்
.............மனிதனின் இலக்கினைக் காண்பாய்
நிதியுறும் சுழற்சி உலகினில் காசு
..........நிகழ்த்திடும் வினையினை யோசி!

"கவியன்பன்"
அபுல் கலாம் 













Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)