
பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 7.500 எக்டேர்
(18,500 ஏக்கர்) பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதுமான மழையில்லாததாலும், தொடர்ந்து சாகுபடி செய்து வருவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதனால் தென்னை பயிர் பாதிப்படைகிறது. தென்னை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நீரும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த நீர் தேவையை சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.
சொட்டுநீர் பாசன முறை என்பது தேவையான அளவு தண்ணீரை சரியான நேரத்தில் பயிருக்கு தருவதாகும். மேலும் தண்ணீருடன் உரங்களையும் சொட்டுநீர் பாசன குழாய் மூலம் வழங்கலாம். சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் பயன்
பெறலாம்.
சொட்டுநீர் பாசன முறை என்பது தேவையான அளவு தண்ணீரை சரியான நேரத்தில் பயிருக்கு தருவதாகும். மேலும் தண்ணீருடன் உரங்களையும் சொட்டுநீர் பாசன குழாய் மூலம் வழங்கலாம். சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் பயன்
பெறலாம்.
இந்த திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. மேலும் ஒரு விவசாயி 10 ஏக்கர் வரை இதன் மூலம் 5 ஆண்டுகள் பயன்பெறலாம். எனவே விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.
-dinakaran
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது