அதிரை அன்றும் இன்றும்..! (அறிமுகம்)

1
" அதிரை அன்றும் இன்றும்" என்னும் தொடரான இதில் அதிரையை பற்றிய உண்மையான வரலாறுகள் இன்ஷா அல்லாஹ் வாரத்துக்கு 1 முறை நம் அதிரை பிறை தளத்தில் பதிய உள்ளோம்.

உலகிலேயே அழகிய வரலாறுகளையும் பாரம்பரிய பெருமைகளையும் சுமந்து நிற்பது இந்திய நாடு என்றால் மிகையாகாது. அத்தகைய நம் இந்திய நாட்டில் உள்ள தமிழ்கத்தில் மிகவும் பழமையான நகரம் என்றால் தஞ்சையும் மதுரையும் தான். இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் ஊரான இது பழங்காலத்தில் இருந்து பெரும் வனிக கேந்திரமாகவும் கடல் வழியாக வனிகம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இது பண்டமாற்று பகுதியாகவும் இருந்தது அதிரை துறைமுகம் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட நமதூர் மக்களின் பழக்க வழக்கங்களும் பேச்சு வழக்கும் பிற பகுதி மக்களை நமதூரின் பக்கம் கவர்ந்து இழுக்கும் கருவியாக இருக்கிறது.

அது போல் அதிரை மக்களின் சுவையான உணவு முறைகளும் இஸ்லாமிய முறைபடி நடத்தப்படும் அழகான திருமண நிகழ்ச்சிகளும், மாற்று மத நண்பர்களிடம் ந‌ட்புற‌வு கொண்டு பழகுவது போன்ற குண‌ங்கள் தான் நமதூர் மீது பிற ஊர்வாசிகள் அதிக அபிப்ராயம் கொண்டிருப்பதற்க்கு காரணம்.

அதுபோன்று அதிரையின் வரலாற்று பெருமையை தாங்கி நிற்க்கும் அதிரை மரைக்காயர் பள்ளிவாசல், மேலத்தெரு, பெரிய ஜும்மா பள்ளி, கடற்கரை தெரு ஜும்மா பள்ளி, தக்வா பள்ளி, அதிரை பெரிய மீன் மார்க்கெட், அதிரை நூலகம், அதிரை குளங்கள், அதிரை மக்கள், அதிரை தெருக்கள் ஆகியவற்றின் சரித்திரங்களையும், வரலாறுகளையும் நாம் இத்தளத்தில் பதிய உள்ளோம்.



இது போன்று வரலாற்று பெருமைக்குறிய அதிரையின் சரித்திரம் மற்றும் சிறப்பம்சங்களை நாம் பதிவதற்கு மகிழ்ச்சியடைகிரோம்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிய முயற்சித்த நிய்யத் வெற்றியடைய துஆவும் வாழ்த்தும்!

    ReplyDelete
Post a Comment