பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி"

0




 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr.K.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் அக்சஸ் இந்தியாவின் ஆராய்ச்சியாளர் முகைதீன் மற்றும் கனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட Dr.இளங்கோ அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
courtesy: muthupettai bbc

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)