அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

0


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழபாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (50). இவர் அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.



இந்நிலையில் சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அதிராம் பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தான கிருஷ்ணனுக்கு கலா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

-maalai malar

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)