
மகனின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தந்தை...!
தந்தையொருவர் தனது ஒன்றரை வயது மகனது உயிரைக் காப்பாற்ற அவனுக்கு தனது சொந்த ஈரலின் 20 சதவீதத்தை தானமாக வழங்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லான்கஷியரைச் சேர்ந்த தாரிக் முஷ்டாக் என்பவரே தனது மகனான மொஹமட் அலி தாரிக்கிற்கு தனது சொந்த இருதயத்தின் ஒரு பகுதியை வழங்கி அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
மொஹமட் 9 வார குழந்தையாக இருந்த போது, அவனுக்கு உயிராபத்தான ஈரல் நோய் ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டது.
இந்நிலையில் அவனைப் பரிசோதித்த லீட்ஸிலுள்ள சென் ஜோன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் , அவனது உயிரைக் காப்பாற்ற அவனுக்கு உடனடியாக ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முஷ்டாக் தனது ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி தனது மகனது உயிரைக் காப்பாற்ற தீர்மானித்தார்.
தந்தையும் மகனும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம் !!
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது