அதிரையின் பல பகுதிகளில் உற்சாகமாக நடைப்பெற்ற குடியரசு தின விழா...!

2
இன்று நம் நாட்டின் குடியரசு தின நாடெங்க்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் பல பகுதிகளில் கொடியேற்றி தங்கள் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.



 இதற்க்கு நமதூர் ஒன்றும் சலைத்தது கிடையாது என்பதை வெளிக்காட்டும் விதமாக நமதூரின் பல இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி தங்கள் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிரை பைத்துல்மாலில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் பேராசிரியர் ஹாஜாமுகைதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்கள்.




இது போல் அதிரை இமாம் ஷாபி பள்ளியின் நடைப்பெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அதிரையின் பிரபல பல் மருத்துவர் டாக்டர் ஃபஜ்லுர் ரஹ்மான் அவர்கள் கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்கள்.





இதுபோல் காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மற்று பெண்கள் பள்ளி, ஏ.எல் மெட்ரிக் பள்ளி, அல்-ஷனா, E.P மாடல் பள்ளி, வெஸ்டர்ன் நர்சரி பள்ளி, அதிரை வாய்க்கால் தெரு நடுநிலைப் பள்ளி, அதிரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதிரையில் உள்ள பிற அரசு, தனியார் பள்ளிகளில் குடியரச்சு தின மிக சிறப்பாக நடைப்பெற்றது.


 




Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அருமையாக புகைப்படத்தினை தந்த அதிரை பிறைக்கு நன்றிகளும் மற்றும் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
Post a Comment