நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் 59-ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று [ 27-02-2014 ] காலை 9.30 மணியளவில் மிக சிறப்பான முறையில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் அவர்கள் விளையாட்டுத்துறை கல்லூரி சாதனைகளை குறித்து தனது உரைகளை எடுத்து உரைத்தனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது