தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்ஹ்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது,
இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி 15 நாட்களில் சுமார் 1 கோடியை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நிவாரண நிதியை உரியவகையில் வினியோகம் செய்வதற்காக தமுமுக குழு முஸப்பர் நகருக்கு புறப்பட்டிருக்கிறது மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, அமைப்புச் செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு புறப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு முஸப்பர் நகரில் முகாமிட்டு அகதி முகாம்களில் வாடிவதங்கும் மக்களை இக்குழு சந்திக்கவுள்ளது. அம்மக்களின் மறுவாழ்வு குறித்து அம்மாநில அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அறிவு ஜீவிகள், சமூக சேவகர்கள் என பல தரப்பினரையும் இக்குழு சந்திக்க உள்ளது.

தகவல்: அதிரை பிறை ஜைது




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது