அதிரை பேபி ஜுவல்லரி முதலாளிகளை அடித்து நகை கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல்! ! !

Irshad Bin Jahaber Ali
3



அதிரை ஆஸ்பத்திரி தெருவில் அமைந்துள்ள பேபி ஆபரண மாளிகையில் இன்று இரவு 9:45 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்லவிருக்கும் சமயத்தில் பேபி ஆபரண மாளிகையின் முதலாளியான ராதா(50), சேகர்(45) அண்ணன் தம்பி ஆகிய   இருவரையும் இரு மோட்டர் பைக்கில் வந்து அரிவாளால் ஆங்காங்கே வெட்டி  நகை கொல்லையடிக்க முயன்ற போது அதனை கண்ட மக்கள் கூச்சலட்டதால் அந்த மர்ம நபர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

உடனே தகவலறிந்த தஞ்சாவூர் டி.எஸ்.பி அவர்கள் தாக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறியதோடு அவர்களின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். 

இவர்களுக்கு முதலுதவிக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் ராதாவிற்க்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு தமுமுக   ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிராம்பட்டினத்தில் கொலை, கொள்ளை, அதிகரித்துவருகிறது. ஏற்கனவே இதை போன்று நடந்து உள்ளது. நாம் எல்லாரும் அறிவோம். வாகன விபத்து என்றாலும், உயிர்க்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு சிக்கிச்சை அளிப்பதாக இருந்தாலும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என்று செல்லவேண்டிய அவலநிலையாக உள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. 24 மணிநேர சேவைமயமாக இல்லை. போதிய மருந்துகள் இல்லை. இந்த அவலநிலை தொடர்ந்தால் பல உயிர்கள் மரணத்தை சந்திக்க நேரிடும். தயவு செய்து சம்பந்தம்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையே விரிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    கண்டிக்கவேண்டிய சம்பவம்.

    உதவிக்கரம் நீட்டிய சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. கண்டிக்கவேண்டிய சம்பவம்.உதவிக்கரம் நீட்டிய சகோதரர்களுக்கு நன்றிகளும் 

    ReplyDelete
Post a Comment