பருவம் (பாடலுடன் கவிதை)

1



முந்தியப்  பருவம் கருவறை வளர்ச்சி

**** முதன்முதற் அங்குதான் சுழற்சி
தந்தையும் தாயும் இறையவ னருளால்
****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
*******வளமையும் இளமையும் தேயும்!

இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
வளமையில் இறையை மறந்ததை யோசி
****வறுமையின் புயலதும் வீசி
உளமதில் பருவ மாற்றமும் வந்து
*****உறுதியும் குலைந்துநீ நொந்து
களமதில் மாறும் காட்சியாய் உருவம்
******கரைந்ததும் காலமெனும் பருவம்!

கருவறைப் பருவம் பெற்றதை மறந்தாய்
****கனவினில் மிதந்துநீ திரிந்தாய்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் கண்டே
****ஒருயுகப் பருவமும் உண்டே
பெருகிடும் துயரம்; பேறெனச் சுவனம்
******பெற்றிடத் தீர்ப்பிலே கவனம்
பருவமாம் மறுமை நிரந்தரம் அன்றோ?
.********படித்திடு வாழ்வினில் நன்றாய்!

அறுவடைப் பருவம் மட்டுமே ஆங்கு
*********அதற்கென விதைத்திடு இங்கு
மறுமுறை உலகின் பருவமும் தீண்டா
*********மறுமையை நம்புவோர் வென்றார்
நெறிமுறை பேணி வாழ்ந்திடும் பருவம்
*******நிழலெனத் தொடரும் உருவம்
பறிமுதல் செய்த உயிருடன் வாழ்க்கைப்
.**********பருவமும் சென்றிடும் காற்றாய்!

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்,(அபுதபி)
பாடியவர்: அதிரை பாடகர்: ஜாஃபர் (ஜித்தாஹ்)


"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. குறிப்பு :
    இந்தக் கவிதை நேற்று [ 27-02-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

    http://www.youtube.com/watch?v=5WpkAFEAlXM

    ReplyDelete
Post a Comment