அதிரையில் காணாமல் போன 12b பேருந்து

1
நமதூரில் காலை 5:30 மணிக்கு  அரசு 12b பேருந்து பட்டுகோட்டைக்கு தினமும் செல்வது வழக்கம் . இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் செல்வது வழக்கம். 

வார விடுமுறைக்காக திருச்சியில் இருந்து ஊருக்கு வரும் ஜமால் முகம்மது. M.I.E.T, M.A.M போன்ற கல்லூரிகளில் பயிலும்  மாணவர்கள் திங்கள் கிழமை அதிகாலை இந்த பேருந்தில் சென்றால் பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் முறையே பேருந்துகளில் ஏறி கல்லூரி துவங்கும் நேரத்துக்கு சென்று விடுவர். 

ஆனால் சில மாதங்களாக மல்லிப்பட்டினத்தில் இருந்து வரும் இப்பேருந்து இந்த நேரத்துக்கு வராத காரணத்தினால் அடுத்து 5:50 மணிக்கு சாமியப்பா பேருந்தில் தான் செல்ல வேண்டியுள்ளது. இப்பேருந்தில் கூட்டம் கடுமையாகவே காணப்படுகிறது. இதனால் அதிரையில் இருந்து ஏறும் பயனிகள் படிகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலையும் உள்ளது.

எனவே பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதிரைக்கு மீண்டும் இப்பேருந்து சேவை துவங்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எனவே பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதிரைக்கு மீண்டும் இப்பேருந்து சேவை துவங்குமாறு அதிரை சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.

    ReplyDelete
Post a Comment