அதிரையில் அதிசயம்! சேவலாக மாறிவரும் கோழி!

1
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் கடந்த சில வருடங்களாக வீட்டில் ஒரு கோழியை வளர்த்துள்ளார். இந்த கோழி சில மாதங்களாக முட்டைகளும் இட்டுள்ளது.

தற்பொழுது சில நாட்களாக இக்கோழியின் நடவடிக்கையில் மாற்றம் கண்ட இவர் இதை கூர்ந்து கவனித்ததில் இக்கோழிக்கு தற்பொழுது தலையில் சேவலை போல் கொண்டை வளர்ந்து வருவதும் சேவலை போல் கூவுவதையும் கண்டு வியப்படைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "இந்த கோழி எங்கள் வீட்டில் தான் ஒன்றரை வருடங்களாக குஞ்சில் இருந்து பிறந்து வளர்ந்து வருகிறது. இதுவும் 2 ஈடுகளாக பல முறை முட்டைகள் இட்டுள்ளது. இதன் முட்டையை அடைகாத்து 5 குஞ்சுகளையும் இது பொரித்துள்ளது.  தற்பொழுது ஒருமாதமாக இதன் தலையில் உள்ள கொண்டை சேவல் போல் சிவப்பாக வளர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பிற சேவல்களைப் போல் அதிகாலை சுவற்றின் மீது ஏறி கூவுகிறது, இதனை பலரு ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்: என்றார்.

இது குறித்த மருத்துவ விளக்கங்களை ஆராய்ச்சியாளர்களான ஜக்குவலின் ஜேக்கப் மற்றும் பென் மாதெர் ஆகியோர் தங்களது ஆய்வுக் கட்டுரையில் கூறுகையில்....

ஒவ்வொரு கோழிக்கும் இரண்டு கருவகங்கள் உண்டு, அவை வலது மற்றும் இடது கருவகங்கள் ஆகும். இதில் இடப்பக்க கருவகம் செயல்பாட்டுக்குறியது. இதில் ஏதாவது நோயின்(எ.கா., கருப்பை நீர்க்கட்டி , நோயுற்ற அட்ரீனல் சுரப்பிகள்)  காரணமாக கோழிகளின் இடப்பக்க கருப்பை செயலிழக்க வாய்ப்புள்ளது. 

இதனால் இங்கு திசுக்களில் மாற்றம் ஏற்ப்பட்டு கோழிகளின் மரபனுவில் மாற்றம் காண்கிறது. இது தான் கோழி சேவலாக மாறியுள்ளதன் இரகசியம்.




குறிப்பு: இது போன்று செய்திகள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்தும் நேரடி ஆய்வு செய்தும் வெறும்  செய்திகளை மட்டுமில்லாமல் அதற்க்கான அறிவியல் விளக்கங்களையும் வாசகர்களுக்காக நாம் பதிகிறோம். இதை ஒரு சிலர் எளிதாக காப்பி செய்து தங்கள் இணையதளத்தில் நன்றி கூட தெரிவிக்காமல் பதிகின்றனர். இனியாவது இது போன்ற செயல்கள் செய்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ளவும்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிசயம்சேவலாக மாறிவரும் கோழி

    ReplyDelete
Post a Comment