பிறை சொன்ன சேதி என்ன?

1

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற
,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள்
ஆனோரே
பிறைகூறும் செய்திகளாய்ப்
பாவடிவில்
,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!
இருளகற்றி ஒளிவீசி வானில்நான்
…..இருந்துகொண்டு பேசுகின்றேன்
மானிடரே!
அருள்வசந்தம்
சுமந்துகொண்டு உங்களிடம்
….அகத்தினுள்ளே நீக்குகின்றேன்
மாஇடரே!
வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்
…வாய்மையை மட்டுமுங்கள்
வாய்களிலே
உரமிட்டு வைத்திருந்து என்வரவை
….உற்சாகமாய்க் காணவந்தீர்
வாயிலிலே!
பிறைக்கீற்றின் கதிர்வீச்சில்
சுமந்துவந்தேன்
…..பிழைபொறுக்க ரமலானின்
மாதமாக
இறைக்கூற்றை நான்சுமந்த
ஒருபிறையில்
….இறக்கிவைத்தான்
மாநபி(ஸல்)க்கு வேதமாக!

கவியன்பன் கலாம், அபுதபி



Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிரை பிறை யா? இல்ல ரமலான் மாத பிறை?

    ReplyDelete
Post a Comment