சென்னைக்கு அபுதாபியில் இருந்து கூடுதல் விமானங்களை அனுப்ப இருக்கும் எதிஹாத் நிறுவனம்

2

எதிஹாட் விமான நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் சொகுசு பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து கொச்சி, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு அதிக முறை விமானங்களை இயக்க எதிஹாட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை, பெங்களூர் மற்றும் கோழிக்கோட்டிற்கு இன்று முதல் இரண்டு முறை விமானங்கள் வந்து செல்லும். இதேபோல் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து ஐதராபாத்துக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதன்மூலம், பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ இந்த விமானங்களை தேர்வு செய்து, வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளுடன் வர்த்தகர்கள் தங்கள் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எட்டிஹாட் விமானங்கள் அபுதாபியை மையமாக கொண்டு இயக்கப்படுகின்றன, துபையிலிருந்து அல்ல. எனவே, திருத்தம் வெளியிட வேண்டுகிறேன்.

    ஒருவேளை அதன் துணை நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் போன்றவற்றின் சேவையை வேண்டுமானால் துபையிலிருந்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  2. உங்கள் கருத்திற்கு நன்றி, தவறு திருத்தப்பட்டது

    ReplyDelete
Post a Comment