எதிஹாட் விமான நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் சொகுசு பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து கொச்சி, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு அதிக முறை விமானங்களை இயக்க எதிஹாட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூர் மற்றும் கோழிக்கோட்டிற்கு இன்று முதல் இரண்டு முறை விமானங்கள் வந்து செல்லும். இதேபோல் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து ஐதராபாத்துக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதன்மூலம், பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ இந்த விமானங்களை தேர்வு செய்து, வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளுடன் வர்த்தகர்கள் தங்கள் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement



எட்டிஹாட் விமானங்கள் அபுதாபியை மையமாக கொண்டு இயக்கப்படுகின்றன, துபையிலிருந்து அல்ல. எனவே, திருத்தம் வெளியிட வேண்டுகிறேன்.
ReplyDeleteஒருவேளை அதன் துணை நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் போன்றவற்றின் சேவையை வேண்டுமானால் துபையிலிருந்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
உங்கள் கருத்திற்கு நன்றி, தவறு திருத்தப்பட்டது
ReplyDelete