முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அட்டகாசம்! களமிறங்கியது தவ்ஹீத் ஜமாஅத்!

Irshad Bin Jahaber Ali
0
நேற்று முத்துப்பேட்டையில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்டது அனைவரும் அறிந்தே. சம்பவம் நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்க்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை நேரில் ஆய்வுசெய்தனர்.


உடனடியாக மாவட்ட மாநில நிர்வாகிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது மாநில நிர்வாகிகள் மூலமாக சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது.


மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
தவ்ஹித்ஜமாத் சட்டப்படி நடவடிக்கை எடுத்து செய்வதில்தான் வெற்றிகிடைக்கும் என உறுதிகொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஆவேசமாக களத்தில் இறங்கியது.
அப்பொழுதே மஸ்ஜித்நூரில் அவசர ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது உடனடியாக பாதிக்கட்ட சகோதரர்களை அழைத்துத்துசென்று காவல்துறையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
புகார்கொடுக்க காவல்நிலையம் சென்ற நிர்வாகிகளிடம் புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தகவல்: Ansari Muthupet 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)