பட்டுக்கோட்டை நகராட்சியின் 10வது வார்டு மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதிமுக வின் பட்டுக்கோட்டை நகர மீனவர் சங்க இணைச்செயலாளராக இருக்கிறார். நேற்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வெளியான உடன் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் இரவு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் விஷம் சாப்பிட்டதை கேள்விப்பட்ட தெருவாசிகள் அவரை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு இன்று காலை ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஜவகர்பாபு, நகரசெயலாளர் பாரதி, மாவட்ட அணி சேரா ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், கவுன்சிலர்கள் மயில்வாகணன், மாஸ்கோ, செல்ல நாகராஜன், பிரபு, பாசறை நகர இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன், உள்பட பலர் அவரை சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் நகரமுழுவது வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கொண்றும் இங்கொண்றுமாக சில கடைகள் மட்டும் திறந்துள்ளன. பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
நன்றி :
pattukottai news time
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது