அதிரை 11வது வார்டில் மூடப்படாத கால்வாயால் நோய் பரவும் அபாயம் !

0


அதிரை 11 வது வார்டு ECR சாலையில் இருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு செல்லும் சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இதனால் கால்வாயை மூடியிருந்த கற்கள் அகற்றப்பட்டு சாலையிலேயே போடப்பட்டன.

இது ஒரு புறம் இருக்க அதிரையில் பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தேங்கியுள்ளது. பொது மக்கள் ஏராளனானோர் இப்பகுதியை கடந்து செல்லும் போது முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் பாதசாரிகள் இந்த தண்ணீரை கடந்து செல்வதற்க்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கழிவு நீருடன் தேங்கி நிற்கும் மழை நீரால் இப்பகுதி மக்களுக்கும் இதனை கடந்து செல்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி இப்பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  









செய்தி & புகைப்பட உதவி :
OKM.பைசல் 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)