அதிரை பள்ளி சிறுவர்களின் இன்றைய ஹீரோ!

1
தமிழக வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன், இவரை தெரியாத பள்ளி மாணவர்கள் குறைவு மழைக்காலத்தில்   இவர் எப்போது TV யில் பேசினாலும் இவர் பேசுவதை கேட்க்க குழந்தைகள் ஓடோடி வருவார்கள். 

ஏன் என்றால் பள்ளி விடுமுறை விடவேண்டும் என்பதற்காக. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வாயால் கூற முடியாது எண்ணற்ற ஆனந்தத்தில் ஆழ்த்திருப்போம் அது ஒரு காலம்! .  

நானும் அதனை அனுபவித்திருக்கிறேன். மறுநாள் மழையில் விளையாடிகொண்டே இருக்கலாம் நண்பர்களுடன் குடையை பிடித்துகொண்டு சில சமயம் அதுவும் இல்லாமல்  ஊர் சுற்றி வருவோம். 

அது ஒரு காலம்! சில நேரங்களில் பள்ளிக்கு சென்ற பிறகு மழை காரணமாக திடிரென விடுமுறை அறிவிப்பார்கள் பள்ளி நண்பர்களுடன் ஆனந்தமாக சுற்றி கொண்டிருப்போம், அவ்வேலையில் மாங்காய் , நெல்லிக்காய், மற்ற நொறுக்கு தீனிகளும் உட்கொல்வது வழக்கம். அது ஒரு காலம்!

-அதிரை சாலிஹ்

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாணவர்களுக்கு மற்றும் இல்லை, வாத்தியார்மார்களுக்கும் ‎கொண்டாட்டம்தான். மழைநேரத்தில் பண்ணா கருவாடு, கால கருவாடு, ‎கொடுவா கருவாடு, மொச்சைக் கோட்டை, ஆனம் படு சூப்பர்.‎

    ReplyDelete
Post a Comment