சவூதி அரேபியாவில் தினமலர் இணையதளத்துக்குத் தடை!

0

சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டுவந்த காரணத்தால் தினமலர் இணையதளம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை பிரதிகளும் அங்குத் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் தினமலர் இணையதளம் திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகையில் வெளியாகும் செய்திகள், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவினைக் கெடுக்கும் வகையில் வேண்டுமென்றே திரித்து வெளியிடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இது தொடர்பாக சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தில் ஆதாரங்களுடன் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றைப் பரிசீலித்த தகவல்தொடர்பு துறை, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உண்மையிருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து தினமலர் இணையதளத்தை முடக்கியது.
அத்துடன் அப்பத்திரிகையின் பிரகளுக்கும் சவூதியில் தடையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபி குறித்து கேலி சித்திரங்கள் வெளியிட்டது தொடர்பாக துபை, சவூதி அரேபியா முதலான நாடுகள் தினமலரைத் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அது போன்ற தவறுகள் நடைபெறாது என்று மன்னிப்பு கேட்டுகொண்டதைத் தொடர்ந்து அதன்மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அத்தளம் தடை செய்யப்பட்டுள்ளது.
வளைகுடாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் தினமலர் மீதான இத்தடை மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இது பத்திரிகை துறைமீதான அடக்குமுறை என்ற விமர்சனமும் மேலெழுந்துள்ளது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)