எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் முஸ்லிம் உதவி ஆய்வாளர் நியமனம் !

0

எஸ்.பி. காவல்நிலையத்தில் பணி புரிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் செய்யது முஹம்மது என்ற வாலிபரை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்து, கொலையை மறைப்பதற்கு மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களும், நியாயவான்களும் கடும் கண்டன குரல்களை எழுப்பினர்.

ஒரு வாரம் தமிழகத்தை பரபரப்பாக வைத்திருந்த எஸ்.பி.பட்டிணம் சம்பவத்தை தமிழகத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் விவாத பொருளாக ஆக்கினர். அனைத்து தொலைக்காட்சியிலும் எஸ்.பி. பட்டிணம் விவாதமே சூடு பறந்தது.

அனைத்து தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்து கொண்ட தமுமுக உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் இயக்க தலைவர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொண்ட SP பட்டிணம் காவல்நிலையத்தில் ஒரு முஸ்லிம் காவலர் கூட இல்லை என்பதை சுட்டிக் காட்டினர்.

இந்நிலையில் எஸ்.பி.பட்டிணம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாள
ராக முஸ்தபா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் . 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)