இந்தியாவில் சிறைக் கைதிகளில் அதிமானோர் முஸ்லிம்கள், தலித்துகள்!

0

இந்தியாவில் சிறைக் கைதிகளில் அதிமானோர் முஸ்லிம்களும், தலித்துகளும் என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.குஜராத் மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக முஸ்லிம்களும், தலித்துகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தேசிய-மாநில சதவீதத்தை விட அதிகமான முஸ்லிம்களும், தலித்துகளும் குஜராத் சிறையில்
உள்ளனர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 13.4 ஆகும்.ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சதவீதம் 19 ஆகும்.முஸ்லிம் கைதிகளில் 17.1 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகள்.21 சதவீதம் பேர் விசாரனைக் கைதிகள்.தேசிய அளவில் அட்டவணை சாதியினரின் மக்கள் தொகை சதவீதம் 16.2 ஆகும்.ஆனால், சிறையில் உள்ள அட்டவணை சாதியைச் சார்ந்த கைதிகளில் 22.5 சதவீதம் பேர் தண்டனைக்கைதிகள்.21.3 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர்.

தேசிய அளவை விட குஜராத்தில் முஸ்லிம், தலித் கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.குஜராத்தில் தலித்துகளின் மக்கள் தொகை சதவீதத்தை விட நான்கு மடங்கு அதிகமாக சிறையில்
தலித் கைதிகள் உள்ளனர்.

குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களில் 32.9 சதவீதமும், விசாரணை கைதிகளில் 23.4 சதவீதமும் தலித்துகள் ஆவர்.

குஜராத் மாநிலத்தில் தலித்துகளின் மக்கள் தொகை சதவீதம் 6.7 மட்டுமே.2013 டிசம்பர் மாதம் வரை 3808 கைதிகள் குஜராத் சிறையில் உள்ளனர்.இதில் 1,251 பேர் அட்டவணை சாதியினர் ஆவர்.624 பேர் பழங்குடியினர்.1,360 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் ஆவர்.இதர பிரிவினர் 573 பேர்.விசாரணை கைதிகளான 7604 பேரில்  1,778 பேர் அட்டவணை சாதியினர்.1,405 பேர் பழங்குடியினர்.2,718 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்.1,703 பேர் இதர பிரிவினர் ஆவர். 23.3 சதவீத குற்றவாளிகளும், 23.6 விசாரணை கைதிகளும் முஸ்லிம்களாவர்.குஜராத் மாநில முஸ்லிம் மக்கள் தொகை சதவீதம் 9.1 ஆகும்.7,604 விசாரணை கைதிகளில் 1,796 பேர் முஸ்லிம்கள் ஆவர். தலித், முஸ்லிம் கைதிகள் அதிகமானோர் உள்ள 2-வது மாநிலம் அஸ்ஸாம்.இங்கு தலித்துகளின் மக்கள் தொகை சதவீதம் 7.2.ஆனால், சிறையில் உள்ள குற்றவாளிகளில் 18.2 சதவீதம் பேர் தலித்துகளாவர்.17.7 சதவீதம் விசாரணை கைதிகளும் தலித்துகளாவர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)