குவைத்தில் கொடுமைபடுத்தப்பட்ட அதிரை இளைஞர் த.மு.மு.க உதவியில் தாயகம் திரும்பினார்!

8
அதிராம்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் Bsc ஒரு பட்டதாரி ஆவார் வீட்டின் கஷ்ட நிலையை போக்க வெளி நாடு செல்ல திட்டமிட அசிஸ்டன்ட் சூப்பர்வைசர் வேலைக்காக குவைத் நாட்டிற்கு ஒரு கம்பெனிக்கு வந்தார்.. வந்த இடத்தில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


குவைத் நாட்டிற்கு வந்ததும் அவரது முதலாளி ராஜேஷை அழைத்து சென்று மற்றொருவருடன் விட்டு விட்டு இங்கு தான் வேலை பார்க்க வேண்டும் என சொல்லியுள்ளார் . அங்கு அவருக்கு கூடாரம் அமைக்கும் வேலையும் அது போக மாடு ஒட்டகத்திற்கு தீனி போடும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய நம் தலைவிதி கடன் வாங்கி வந்துள்ளோம்.

எப்படியும் சமாளிப்போம் என்று நினைக்கையில் பழைய முதலாளி தினசரி வேலை நடக்கும் இடத்திற்கு வந்து. இவரை அழைத்து அருகே உட்கார வைத்து சிகரெட் குடித்து முடித்த பின்பு ராஜேஷின் கையை நீட்ட சொல்லி அணைப்பாராம்

இந்த கொடுமையை தம்மால் தாங்க முடியாது என நினைத்து தப்பித்து தாயகம் செல்ல நினைக்க, குவைத்தில் செயல்பட்டு வரும் தமுமுக மதிமுக வுக்கு தெரிய வர அவரை மீட்டு தூதரக பாதுகாப்பில் வைக்கப்பட்டது


தமுமுக -மதிமுக வினர்களின் தொடர் முயற்சிக்கு தூதரகத்தின் அதிரடி அழுத்தத்தால் முதலாளி நேரடியாக வர தயங்கி மற்றொரு இந்தியர் மூலம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பிறகு ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (29.11.2014)சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு நல்லபடியாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்


இவருக்கு ஒரு ஆண் குழந்தை யும் இரண்டு பெண் குழந்தை யும் இருக்கிறார்கள். தமுமுக - மதிமுகவினர்கள் நல்ல முறையில் தாயகம் அனுப்பி வைத்தனர்.


இவர் குவைத்திற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது 21.09.2014 அன்று தான் குவைத் வந்துள்ளார் 29.11.2014 இல் தாயகம் சென்றார். படத்தில் மதிமுக செம்பை விஜயன் ,தமுமுக நெல்லை பீர் மரைக்காயர் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Advertisement

Post a Comment

8Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. Kodekkum
    tmmk seaithekkum
    sammantham ellai
    kodeyai adugka br

    ReplyDelete
    Replies
    1. சகோ.சாகுல் ஹமீது அவர்களுக்கு, இந்த கொடி குவைத் நாட்டின் கொடியாகும். செய்திக்கும் இப்படத்திற்கும் சம்மந்தம் உள்ளது.

      நன்றாக விளங்கி கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  2. Entha. Sampavaththel yaral veatre kedaiththathu.
    tmmk. mdmk evar kalen
    kode allava poda veandum
    sentheppom

    ReplyDelete
    Replies
    1. எந்த படத்தை பதிந்தால் என்ன செய்தியிலும் தலைப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதேகுறிப்பிடப்பட்டுள்ளதே அது போதுமானதாகும்

      Delete
  3. தயவு செய்து புரியுரமாதிரி கமெண்ட்ஸ் பண்ணுங்க காக்கா

    ReplyDelete
  4. Saaraya kadai el
    marunthu keatpathu pol
    erukku

    ReplyDelete
Post a Comment