சென்னை விமான நிலையத்தில் விபத்து! பெரும் பரபரப்பு!

1

சென்னை விமான நிலையத்தில் 32வது முறையாக 9அடி உயர கண்ணாடி கதவு உடைந்து விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் இருக்கையில் இருந்து வெளியே சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2015 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி நடந்தது. 

உள்நாட்டு முனையத்தில் 2013 ஏப்ரல் 23ம் தேதி விமான போக்குவரத்து தொடங்கி, 19 நாட்களில் மே 12ம் தேதி அதிகாலையில் மேற்கூரை உடைந்து விழுந்து முதல் விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் கண்ணாடி கதவுகள், சுவர்கள், கிரானைட் கற்கள், மேற்கூரைகள் என தொடர்ச்சியாக, கடந்த மாதம் வரை 31 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், 2 விமான நிலைய ஊழியர்கள், 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். 6 குளிர்சாதன பெட்டிகள் உடைந்து நொறுங்கியது.

இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்துக்கு செல்லும் ஜி14 வாசலில் 9 அடி உயரம், 4 அடி அகலத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்நேரத்தில் பயணிகள், அவ்வழியாக செல்லவில்லை. இதை அறிந்ததும், விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கண்ணாடி சிதறல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. "பிடி அந்தக் காண்ட்ராக்டர் பயலை ! க்யாரன்டி, வாரண்டி எதுனாச்சும் தந்தானா..?" என்று கேட்கத் தோன்றுகிறது.

    "உஸ்ஸ்ஸ்..! அந்தக் காண்ட்ராக்டர் நம்ம கட்சித் தோழரப்பா ..!"

    அப்புறமென்ன? கூலா ஒரு ரிப்பேர்; போதும். அடுத்த விபத்தில் சந்திப்போம்..!

    ReplyDelete
Post a Comment