அதிரை அரசு மருத்துவமனை எதிரே பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு மிகவும் அசுத்தமாக காணப்பட்டது. இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தனர். அப்பகுதியில் உடைந்து கிடந்த குப்பை தொட்டி ஒன்றை சீர் செய்து அதில் குப்பைகளை கொட்டுமாறு அறிவுறுத்தினர்.
ஒரு சிலர் பொது நலன் கருதி குப்பைகளினை அந்த குப்பைத் தொட்டியில் கொட்டினாலும் பெரும்பாலானோர் எந்த அக்கரையும் இன்றி திறந்த வெளியில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து ஒரு இளைஞர் மன வேதனையுடன் நமதூர் மக்கள் சிலர் பொது அக்கரையின்றி இருப்பது குறித்து தெரிவித்தார்.
நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்ள கூடாது. சுற்றுபுறங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது