இந்திய வீரருக்கு தண்ணீர் கொடுத்து மனிதாபிமானத்தை நிலைநாட்டிய பாகிஸ்தான் வீரர்!

Editorial
0
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலககோப்பை போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்த்த மிக முக்கிய போட்டியான இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணியளவில் ஆஸ்திரேலியாவின் அலிலெய்டு மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி  பெற்றது.

இதனை அடுத்து இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை  கொண்டாடினர். பலரும் இதில் இந்திய அணியின் வெற்றியையும், விராட் கோலியின் சதத்தை பற்றியும் தான் பேசியிருப்போம். 

ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் தேனீர் இடைவேளையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்காக தண்ணீரை கொண்டு வந்த அந்த அணியின் மாற்று வீரர் (SUBSTITUTE PLAYER)  ஒருவர் விராட் கொஹ்லிக்கு தண்ணீரை வழங்கி மனிதாபிமானத்துடன்  நடந்துக் கொண்டார்.

நாம் தான் இந்தியா பாகிஸ்தான், பரம எதிரிகள் என்று கூறிக்கொண்டு உள்ளோம். ஆனால் இந்த பாகிஸ்தான் வீரர் எதிர் அணி வீரரான விராட்  கொஹ்லிக்கு தண்ணீர் வழங்கினார். இது போல் மதம் பாராமல், இனம் பாராமல் அனைவரையும்  நம்மவர்களாக நமது சகோதரர்களாக கருதினால் உலகம் ஒற்றுமை பெறுவது உறுதி.

ஏக்கங்களுடன் ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)