சவூதி அரேபியா நேற்றைய தினம் ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதலை துவங்கியது. இதனை அடுத்து வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது என்னேரமும் திருப்பி தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக ஏமன் நாட்டு எல்லையில் அமைந்துள்ள தென் நகரங்களான அப்ஹா, ஜிஹான் மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட 7 விமான நிலையங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும் இன்று அப்ஹாவில் இருந்து விமானப் பயணம் செல்ல இருந்த பயணிகளை தாயிப் வழியாக அனுப்பப்பட உள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள் நாட்டு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களும் அடங்கும்.
தகவல்:அஹமது ஜலாலுத்தீன் (அதிரை -Camp Saudi)
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது