அதிரை ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி இன்று இரவு 9 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைதானத்தில் வானவேடிக்கையுடன் சிறப்பாக துவங்கியது. முதலாவதாக காட்சி ஆட்டத்தினை அதிரை ASC அணியினரும் தைக்கால் தெரு அணியினரும் ஆடினர். இந்த போட்டியினை ASC பயிற்சியாளர் ராஜா, ASC கேப்டன் ஷாஃபி, போட்டிக்கான நான்காம் பரிசை வழங்கிய சாவன்னா ஆகியோர் துவக்கி வைத்தனர். இத் தொடர் போட்டியில் பல அணிகள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இத்தொடர் போட்டிக்கான இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் என போட்டி ஏற்ப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
பரிசுகள் விபரம்:
முதல் பரிசு : 10000
இரண்டாம் பரிசு: 7000
மூன்றாம் பரிசு : 5000
நான்காம் பரிசு: 4000
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது