சுப்ரமணியசாமியை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Unknown
1


மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது கனியாஸ்திரியை கொடூரமாக கற்பழித்த கயவர்களை கண்டித்தும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறாக பேசிவரும் சுப்ரமணியசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் இன்று மாலை 4.00 மணியளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜகபர் சாதிக் (அதிரை ராஜா) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் மஜீத் (பட்டுக்கோட்டை நகர தலைவர்),கலிபுல்லா(பட்டுக்கோட்டை நகர செயலாளர்),ஷேக் தாவுது (நகர பொருளாளர்)ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான்,நா.இளந்தென்றல் (மாவட்ட செயலாளர் வி.சி.க),சதா.சிவகுமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரை நகர செயலாளர் பீச் முகைதீன் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 120 பேர் கலந்து கொண்டனர்.  











Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment