அதிரையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்த கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு காவல் துறை அனுமதி!

0

சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது.  இதனை அடுத்து அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் கடந்த (30-03-2015) 12 வேன்களில் அதிரையில் உள்ள அனைத்து தெருவாசிகள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இதற்கு 300க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் தஞ்சை சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் வரும் (30-04-2015)அன்று காலை 10.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் சாலை மறியல் நடைபெற முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று இரவு 8.00 மணியளவில் காவல் துறையிடம் அனுமதி பெற பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் தலைமையில் 15 க்கும் மேற்ப்பட்டோர் சென்றனர்.காவல் துறையினரும் இந்த சாலை மறியலுக்கு அனுமதி அளித்தனர். 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)