உலக பூமி தினம் இன்று; உணர்வோம் பூமியின் நிலையை நன்று!

0
நாளும் மெலிகிறது
நாட்டின் பசுமை
கோளும் எரிகிறது
கோடை வெயிலில்!
சுற்றும் பூமியெனும்
சுகந்தரும் மாத்திரையைப்
பற்றிச் சாப்பிடத்தான்
பலமுடன் காத்திருக்கு!
.
தீவுகள் எல்லாம்
திரைகடல் உள்ளே
காவுகள் கொண்டு
கரைந்துதான் போகும்!
உயிராம் காற்றும்
உணவான நீருமின்றி
பயிரும் வாடும்
பரிதாபம் வேருடனே!
காசுகள்தான் இசைத்தாலும்
காகிதம் இசைக்குமா?
வீசுகின்ற அசைவின்றி
வேகிடும் நிலையிது!
பூவுலகின் உடலில்
பூவிதழ் உலர்ந்து
ஆவியினால் திடலாய்
ஆகிடும் கடலும்!
வானத் தாயின்
வல்லமை ஓசானாம்
மானத் தைத்தான்
மண்ணிலே துகிலுரித்தோம்!
புறவூதா தீக்குச்சிப்
புலம்பெயர்ந்து தெரிகிறது
நிறம்மாறும் போக்குத்தான்
நிலமடுப்பு எரிகிறது!
பச்சைத் துணியகற்றி
பால்வெண்மை விதவை:
இச்சைத் தணித்திடுமா
இந்தக்கா கிதமும்!
மரத்தை அறுத்து
மாளிகைச் சாளரம்
வரத்தைத் தருமா
வானிலே மாமழை!
காசின் தணப்பில்
காற்றின் துரோகிகள்
வீசும் அனலில்
வியர்க்கும் வறியவர்!

”கவியன்பன்” கலாம்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)