நாகூர் E.M.ஹனிபா அவர்கள் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இராமநாதபுரத்தில் பிறந்தார்கள். தந்தையின் சொந்த ஊரான நாகூரை அவரது பெயரோடு இணைத்து கொண்டார்கள். ஹனிபாவின் மனைவி ரோஷன். இவர் ஏற்கனவே காலமாகி விட்டார்கள். நாகூர் ஹனிபாவுக்கு நவ்ஷாத் அலி, நாசர் அலி ஆகிய மகன்களும், நஜீமா பேகம், நூர்ஜகான் பேகம், ஜரீனா பேகம், மும்தாஜ் பேகம் ஆகிய மகள்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றியும் இஸ்லாமிய வரலாறுகளையும் மிக அழகாக அனைத்து மத மக்களும் விளங்கி கொள்ள கூடிய விதத்தில் தமது புகழ் பெற்ற இஸ்லாமிய பாடல்களின் மூலம் பாடி அனைவரையும் கவர்ந்தவர் இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா அவர்கள். பல மாற்று மத சகோதரர்கள் நாகூர் E.M. ஹனிபாவின் பாடல்களை கேட்டே தாம் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டதாக கூறியுள்ளனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது