
நீங்கள் பார்க்கும படத்தில் வரிசையாக அமர்ந்திருக்கும் சிறுவர்கள் அனைவர்களும் சவுதி அரேபியவின் ரியாத் மாநகரை சார்ந்தவர்கள் அமர்ந்திருக்கும் 12 சிறுவர்ளும் 11 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த குறைந்த வயதிலேயே திருமறை அல்குர்ஆனின் 30 பாகங்களையும் தங்கள் மனதில் பதித்தவர்கள். அந்த இளம் மேதைகளுக்கு அவர்கள் திருகுர்ஆனை பயின்ற மதர்சாவிலேயே அவர்களை கவுரவிக்கும் விதமாக பரிசுகள் பல வழங்க பட்டு அவர்கள் மரியாதை செய்ய பட்டார்கள்
அவர்கள் கவுரவிக்க பட்ட நிகழ்வில் பேசியவர்கள் உங்கள் சிறுவயதிலேயே திருகுர்ஆன் முழுவதையும் உங்கள் மனதில் சுமக்கும் மிகபெரும் பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்
இந்த பாக்கியத்தை இறைவன் அனைவருக்கும் வழங்குவதில்லை உங்களுக்கு வழங்கியிருப்பதின் மூலம் இறைவன் தனது அருளை உங்கள் மீது பொழிந்துள்ளான்.
மேலும் இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதர்கு நாங்கள் பிரார்திக்கிறோம் நீங்களும் அதை சரியாக பயன் படுத்தி கொண்டு இறைவன் விரும்புதையில் உங்கள் பயணத்தை தொடருங்கள் இவ்வாறு பேசினர்.
இது போன்ற இளம் மேதைகளை நமது சமூகங்களிலும் உருவாக்க நாம் முயர்ச்சிப்போம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது