2015-16ம் கல்வியாண்டுக்கு விளையாட்டு மையத்தில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி!

0
2015-16ம் கல்வியாண்டுக்கு சென்னை முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு வாள்சண்டை விளையாட்டில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை (10 முதல் 14 வயது) மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். உயரமானவர்கள், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உணவு, தங்குமிடம், விளையாட்டு பயிற்சி, சீருடை இலவசமாக வழங்கப்படும். 

எந்த காரணத்தாலும் இடையில் வெளியேறினால் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் கணக்கிட்டு பணம் செலுத்த வேண்டும். எனவே முதன்மை விளையாட்டு விடுதியில் சேர தகுதியுள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெறலாம்.  

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலாளர், முதன்மை நிலை விளையாட்டு மைதானம், அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டும். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)