இன்று 16.05.2015 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் லண்டன் கிளையின் சார்பாக நம் அதிராம்பட்டினம் நகருக்குள் அமைந்துள்ள மேல் நிலைப்பள்ளிகளுக்குள் முதல்மூன்று இடங்களைப் பெற்று அரசுத்தேர்வில் வெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டி அவர்களை மேல்நிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஆர்வம் பெறச் செய்வதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அத்துடன் நமதூரில் ஊடகச் சேவைபுரிந்து வரும் அதிரை இணையதளங்களுக்கும் நமதூரின் மத்ரஸாக்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில் ஊரின் கண்ணியமிக்க பெரியோர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு செக்கடிப்பள்ளி வளாகத்திலும் பெண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.Photos: Manichudar Shahul hameed
Advertisement










பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் லண்டன் கிளை விருது வழங்குகிறது. அருமையான நிகழ்ச்சி.
விருது எதுக்கு வழங்குகிறோம்?
சேவை, தன்மை, நேர்மை, உண்மை, போன்ற நிலைகளை வைத்துதான் வழங்கப்படுகிறது.
இந்தக் காலக் கட்டத்தில் விவாகரத்து அதிகமாக நடந்தேறி வருகின்ற வேளையில், யார் யாரெல்லாம் இதுவரை விவாகரத்து இல்லாமல் ஒரே கணவன் ஒரே மனைவியாக பிரியாமல் வாழ்ந்துவரும் தம்பதியர்களுக்கும் விருதுகள் வழங்கினால் நல்லது.
இதை சம்சுல் இஸ்லாம் சங்கம் சிந்திக்குமா.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.